சாதனைகள் படைத்த நெஞ்சமடி
சோதனையால் நெஞ்சு கெஞ்சுதடி
வேதனைகள் என்னை கொஞ்சுதடி
வாலிபமோ என்னைக் கொல்லுதடி
காலிலே செருப்பானேன் நீ நெருப்பானாய்
காதிலே இசையானேன் நீ வெறுத்திட்டாய்
கனிவான சிரிப்பானேன் நீ எரித்திட்டாய்
கனவிலும் தேடினேன் நீ கலைந்திட்டாய்
கொடியிடை நீயென்று பின் நடந்திட்டேன்
செடியிலே மலரின்றி கொந்தளித்தேன்
அடிமீது அடிவைத்து மலையடைந்தேன்
அணுகுண்டு மலைவீழ்ந்து மரணித்தேன்
இறந்த பின்னும் உனக்காய் பிறப்பேன்
இல்லையென்றால் மீண்டும் இறப்பேன்
இறப்பில்தான் நீ கிடைப்பாய் என்றால்
இறந்துகொண்டே இருப்பேன்
No comments:
Post a Comment