Thursday, November 17, 2011

அழியாத நினைவுகள்



சாதனைகள் படைத்த நெஞ்சமடி
சோதனையால் நெஞ்சு கெஞ்சுதடி
வேதனைகள் என்னை கொஞ்சுதடி
வாலிபமோ என்னைக் கொல்லுதடி


காலிலே செருப்பானேன் நீ நெருப்பானாய்
காதிலே இசையானேன் நீ வெறுத்திட்டாய்
கனிவான சிரிப்பானேன் நீ எரித்திட்டாய்
கனவிலும் தேடினேன் நீ கலைந்திட்டாய்


கொடியிடை நீயென்று பின் நடந்திட்டேன்
செடியிலே மலரின்றி கொந்தளித்தேன்
அடிமீது அடிவைத்து மலையடைந்தேன்
அணுகுண்டு மலைவீழ்ந்து மரணித்தேன்


இறந்த பின்னும் உனக்காய் பிறப்பேன்
இல்லையென்றால் மீண்டும் இறப்பேன்
இறப்பில்தான் நீ கிடைப்பாய் என்றால்
இறந்துகொண்டே இருப்பேன்

No comments: