Thursday, March 16, 2006

அட....

அட... என்ன இது தலையங்கம் எண்டு யோசிக்கிறிங்கள். சும்மா, சொந்தப்படம் எண்டு சொல்லி கொஞ்ச நாளா படம் காட்டிக் கொண்டிருந்தனான். இண்டைக்கு உருப்படியா எதாவது எழுதுவம் எண்டு யோசிக்கிறன்.

இப்ப, சிட்னில பல்கலைக்கழக மாணவர்களின் மனப்பான்மையைப் பார்த்தால், ஒரு இந்தியன் Society எண்டு சொல்லி கலாச்சாரத்த வளர்க்கிறதா சொல்லி "Cultural Night" எண்டு நாலஞ்சு டான்சும் கொஞ்ச தண்ணி + டான்ஸ் பாட்டிகளும் வைத்தால்... "அட... " எண்டு பார்ப்பினம். ( இப்ப தலையங்கம் விளங்குதா?)

அதே நேரம், தமிழ்ச்சங்கம் எண்டால் ஏண்டா நாயே எண்டு கூட பார்க்க ஆக்கள் இல்லாமல் இருக்குது. ஏனெண்டால், நாங்கள் கலாச்சார நிகழ்வை கலாச்சார நிகழ்வாக வைக்கிறோம். தண்ணி பாட்டி வைக்கிறது இல்ல. அதான் எங்கட நிலமை. எத்தனை எங்கட தமிழ் பிள்ளைகள் இந்திய சங்கங்கள் எண்டு அலையுதுகள், ஏன் தமிழ்ச் சங்கம் எண்டால் அவ்வளவு குறைவா? குறிப்பாக, இங்க சிட்னில, தமிழ் வளர்க்கிறம் எண்டு கத்திக் கொண்டு நாடகங்களும் நடத்தி புத்தகமும் வெளியிடுற ஆக்கள்ட பிள்ளைகள்தான் இந்த இந்திய சங்கங்கள்ல கூட இணையுறது.

என்ன பிரச்சினை எண்டால், தமிழ்ச் சங்கத்தில் இருந்தால் தங்களயும் "FOB" (FRESH OFF THE BOAT) எண்டு கூப்பிடுவினமோ எண்ட தாழ்வு மனப்பான்மை. தரித்திரம் பிடிச்ச தமிழன்ட தாழ்வு மனப்பான்மை, எப்பதான் போகப் போகுதோ?

தண்ணியடிச்சாத்தான் மதிப்பு எண்டு நினைக்கிற இன்றைய தமிழ் பல்கலைக்கழக மாணவர்களை என்னதான் செய்யுறது?

No comments: