Thursday, February 23, 2012

சிறகொடிந்த பறவையாய்

புலம்பெயர்ந்து
அகம் இழந்து
மொழி தொலைந்து
எதிலியானோம்

சொந்தங்கள் 
சொர்க்கத்தில்
சொந்த பூமியோ
நரகத்தில்

விடிவு வரும்
நாளையென்று
வாடித்தவித்து
வருடங்கள் ஓடுதடி

தமிழ் மறந்து
தாயகம் துறந்து
தெரியாத தேசத்தில்
புரியாத வாழ்க்கை

கணணியில் கண்டு
கணவனும் மனைவியும்
காலந் தள்ளும்
கேவலங்கள்

காதலும் காமமும்
சங்கமிக்கும்
முடிவிலியில்
கலாச்சாரம்

அடையாளம் தெரியாத
விதிமுறைகள் பிழையான
அவசர உலகத்தில்
அகதியாய் எம் வாழ்வு

No comments: