தட்டிப் பார்த்தேன்
முட்டிப் பார்த்தேன்
மோதிப் பார்த்தேன்
திறக்கவில்லை
நீண்டதொரு யுத்தம்
இரத்தச் சகதியில்
இன்னுமொரு பிறப்பு
தொப்புள்கொடி நோ
தீருமுன்னே
வாரியணைத்தாள் அன்னை
முத்தமிட்டாள் என்னை
பித்தம் கொண்டேன்
தாய் மீது
தாய்மை மீது
எனக்கும் காதல் வந்தது

No comments:
Post a Comment