தொலைவினில் நிலவு
தாலாட்டும் இசை
மகிழ்ச்சியில் இவ்வுலகு
பறவைகள் இல்லை
ஒலியற்ற நிசப்தம்
விண்மீனோடு வெளிச்சம்
உறைகின்ற பொழுது
வானில் வெண்ணிலா
எங்கே என் நிலா
திரை மறைவில் நீ
திசை தெரியாமல் நான்
அலையோசை தூரத்தில்
அவள் உறங்கும் நேரத்தில்
தமிழோடு உறவாடும்
எந்தன் விரல்கள்..

No comments:
Post a Comment