Thursday, February 09, 2012

நள்ளிரவில் உந்தன் சொப்பனங்கள்

அழகிய இரவு
தொலைவினில் நிலவு
தாலாட்டும் இசை
மகிழ்ச்சியில் இவ்வுலகு

பறவைகள் இல்லை
ஒலியற்ற நிசப்தம்
விண்மீனோடு வெளிச்சம்
உறைகின்ற பொழுது

வானில் வெண்ணிலா
எங்கே என் நிலா
திரை மறைவில் நீ
திசை தெரியாமல் நான்

அலையோசை தூரத்தில்
அவள் உறங்கும் நேரத்தில்
தமிழோடு உறவாடும்
எந்தன் விரல்கள்..

No comments: