Tuesday, October 14, 2008

கனபரா அமைதிப் போராட்டம்.

இன்று அவுஸ்ரேலியத் தலைநகர் கன்பராவில் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சரின் வருகையையும் அவருடைய தமிழர்களுக்கு எதிரான பரப்புரையும் கண்டித்து அவுஸ்ரேலிய தமிழர்களால் அமைதி கண்டனப்போராட்டம் நடைபெற்றது. சி்ட்னி நகரிலிருந்து 6 பேரூந்துகளிலும் மெல்பண் நகரிலிருந்து 2 பேரூந்துகளிலும் தமிழர்கள் ஒருங்கினணந்து வந்து இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட காட்சி அனைவரையும் புல்லரிக்கச் செய்தது. கன்பராவிலிருந்தும் தமிழ் நெஞ்சங்கள் வேலையில் மதிய இடைவேளையில் கலந்து எம் ஒற்றுமையை நிலைநாட்டினார்கள். Don't kill tamils, Go Away Rohitha, Tamils want press freedom போன்ற உணர்வுகளை பொங்கியெழச் செய்யும் வாக்கியங்களை மக்கள் விண்ணளாவக் கோசமிட்டார்கள். வேலை, படிப்பு என்று நொண்டிச்சாட்டுச் சொன்ன நாட்டுப்பற்றாளர்கள் நாக்கைப் புடுங்கிக் கொண்டு சாகலாம்.

ஓர் சில நிழல்படங்களை கீழே காணலாம். குறிப்பு: நான் தொலைத்த 40 நாற்பது டொலரை யாராவது கண்டால் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்.





No comments: