Friday, November 07, 2008

முதல் முதலாய் அம்மாவுக்கு...


என் மனதைக் கவாந்த கவிதை வைரமுத்துவின் கவிதையொன்று... இதனை சுட அனுமதித்த நண்பருக்கு நன்றி. இந்தக் கவிதையிலே வைரமுத்துவின் கவிஞன் என்ற இறுமாப்பும் ஓர்வித வெறுப்பும் தெரிகிறது. படித்துப்பாருங்கள்.


ஆயிரம் தான் கவி சொன்னேன்
அழகழகாக பொய் சொன்னேன்
பெத்தவளே உன் பெருமை
ஒத்தவரி சொல்லலையே...

காற்றெல்லம் மகன் பாட்டு
காகிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லம் மகன் பேச்சு
உன் கீர்த்தி எழுதலையே...

எழுதவோ படிக்கவோ...
ஏலாத தாய் பற்றி
எழுதியென்ன லாபம் எண்டு
எழுதாம போனேனோ?

பொன்னையாத்தேவன் பெத்த
பொன்னே குலமகளே...
என்னை புறம் தள்ள
இடுப்பு வலி பொறுத்தவளே...

வைரமுத்து பிறப்பான் எண்டு
வயித்தில் நீ சுமந்ததில்லை...
வயித்தில் நீ சுமந்ததொன்னு
வைரமுத்து ஆகிருச்சு...

கண்ணு காது மூக்கோடு
கறுப்பா ஒரு பிண்டம்
இடப்பக்கம் கிடக்கையில
என்னன்னு நினைச்சிருப்ப...?

கத்தி எடுப்பவனே...?
களவாட பிறந்தவனோ...?
தரணி ஆள வந்திருக்கும்
தாசில்தார் இவன் தானோ...?
இந்த விவரங்கள்
ஏதொன்னும் தெரியாம
நெஞ்சூட்டி வளர்த்த உன்னை
நினைச்சா அழுகை வரும்...

கத கதன்னு
களிக்கிண்டி
களிக்குள்ள குழி வெட்டி
கருப்பட்டி நல்லெண்ணை
கலந்து தருவாயே...

தொண்டையில
அது இறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையில இன்னும்
மச மசன்னு நிக்குதம்மா...

கொத்தமல்லி வறுத்து வைச்சு
குறுமிளகாய் இரண்டு வைச்சு
சீரகமும் சிறுமிளகும் சேர்த்துவைச்சு
நீர் தெளிச்சு
கும்மி அரைச்சு
நீ கொழ கொழன்னு வடிக்கையில
அம்மி மணக்கும்
அடுத்த தெரு மண மணக்கும்...

தித்திக்க சமைச்சாலும்
திட்டிக்கிட்டே சமைச்சாலும்
கத்தரிக்காய் நெய் வடியும்
கருவாடு தேன் ஒழுகும்...

கோழிக்குழம்பு மேல
குட்டி குட்டியா மிதக்கும்
தேங்காய்ச்சில்லுக்கு
தேகமெல்லம் எச்சி ஊறும்...

வறுமையில நாம பட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்.

பாசம் உள்ள வேளையில
காசு வந்து கூடலையே...
காசு வந்த வேளையில
பாசம் வந்து சேரலையே...

கல்யாணம் நான் செய்து
கதியற்று நிக்கையிலே
பெத்த அப்பன் சென்னை வந்து
சொத்து எழுதி போன பின்னே...

அஞ்சாறு வருசம்
உன் ஆசைமுகம் பாக்காம
பிள்ளை மனம் பித்தாச்சே
பெத்த மனம் கல்லாச்சே...

படிப்பு படிச்சுகிட்டே
காசு அனுப்பி வைச்ச மகன்
கைவிட மாட்டான்னு கடைசிவரை
நம்பலையே....

பாசம் கண்ணீர்
பழையகதை எல்லாமே
வெறிச்சோடிப்போன வேதந்தம்
ஆகிருச்சே...

வைகையில ஊர் முழுக
வல்லூரும் சேர்ந்தழுக
கைப்பிடியா கூட்டி வந்து
கரைசேத்து விட்டவளே!

எனக்கொன்னு அனதுன்னா
உனக்கு வேற பிள்ளையுண்டு...
உனக்கு எதும் ஆனதுன்னா
எனக்கு வேற தாயிருக்கா?

-வைரமுத்து-

4 comments:

Unknown said...

juz now heared this in his own voice... great job :)))

Sen Sithamparanathan said...

yeah, it is an awesome poem. If you have the audio version of it, please send it to me. I would love to listen to it. I think the last para was made into a song in 'God Father - Varalaru'

Unknown said...

ya sure... :)) I too heared that lines in Varalaru... it was nice.. :))

Sen Sithamparanathan said...

நன்றியம்மா...