Saturday, November 22, 2008

வாழ்க்கை - ஓர் கிறுக்கல்


போராட்டமே வாழ்க்கையென்று
வாழ்பவர்கள் எத்தனையோ
வாழ்க்கையே போராட்டமாய்
மாறுயதும் ஏன்தானோ

சின்ன வயதினிலே
சிரிப்பதும் அழுவதும்
அழகென்றார் சிலர்
அன்பு காட்டவோ பலர்

பள்ளிக்கூடம் போகையிலே
பாடப்புத்தகம் பாரமென்று
சைக்கிளுக்கு அடப்பிடித்து
அழுதிட்ட நினைவுகள்

சைக்கிளும் வாங்கிவிட
ஸரைல் காட்டும் அவதிலே
சேற்றிலே வழுக்கி விழுந்து
பெற்றிட்ட விழுப்புண்கள்

ஊருக்கு ஆமி வர
ஊரே பயந்தோட
இரவோடு இரவாக
இடப்பெயர்ந்த ஞாபகங்கள்

இளமைத் துடிப்பினிலே
இரவெல்லாம் ஊர்சுற்றி
விடிந்தபின்பு வீடுவந்து
வாங்கிக்கட்டிய பொழுதுகள்

வைரமுத்தின் வரிகளிலே
தமிழ் படித்து சொல் பிடித்து
வார்த்தைகளே கிறுக்கல்களாய்
வரைந்திட்ட கவிதைகள்

கண்காணாக் காதலிக்காய்
கவிதையிலே கடிதமெழுதி
பொழுதெல்லாம் செலவாக
வரவானவானதோ குப்பைகள்

எல்லாமே கரைந்தோட
எந்திரமே வாழ்க்கையாக
ஏதோ ஒன்றேத் தேடி
எங்கெங்கோ பயணங்கள்

வாழ்க்கையின் பொருளைத்தேடி
பொருளற்ற வாழ்வைத்தேடி
காலமும் விரைகின்றது
கனவுகளும் கலைகின்றன

போராட்டமே வாழ்க்கையென்று
வாழ்பவர்கள் எத்தனையோ
வாழ்க்கையே போராட்டமாய்
மாறுயதும் ஏன்தானோ

No comments: