Monday, February 27, 2006

என்னைக் கவர்ந்தது

ஆண்கள் எல்லாம் பாவம் என்பது இதுதானோ?

என்னைக் கவர்ந்த ஒன்று:

Thursday, February 23, 2006

அட...என்ன உலகமோ...

கொஞ்ச நாளுக்கு முன்னால் tamil rappers பற்றி கொஞ்சம் காரமா விமர்சிச்சனான். இப்பத்தான் SujeethG ய பற்றி ஒரு செவ்வி கேட்டேன். சயந்தன்ட பக்கத்தில. அருமை. நல்லாக ரப் பண்ணுகிறார். தமிழ் வரிகள் கேட்பதற்கு அருமையாக இருக்கின்றன. நீங்களும் போய் பாருங்க... SujeethG
தமிழ் எங்க தழைத்தாலும் வாழ்த்தவும் வேணும்தானே...

அத விடுங்கோ... வாழ்த்தியாச்சு... இனி வீழ்த்துவம்.

இந்த பெட்டையள் ஸ்ரைலா உடுத்திற்று படம் பார்க்க எண்டால் வந்திடுவினம். ஒருமுறை, ஒரு மருத்துவ வகுப்பு ஒண்டு இருக்கு. வாங்கோ எண்டு அழைப்பு விடுத்தனான். அதுவும் இலவசமாக அரசாங்கம் நடத்துற நிகழ்ச்சி. ஒருத்தி கூட வரல. இது கலியுகம் எண்டு வைரமுத்து சொன்னது சரிதான் போல இருக்கு.

Wednesday, February 22, 2006

சிரிக்கவா? சிந்திக்கவா?


நேற்று நாங்கள் படமொன்று பார்க்க போயிருந்தோம். அப்போது நகைச்சுவைலயாக சிரிப்பவர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

ஒருவர் சொன்னார்: என்னோட நண்பர் ஒருவர் "ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" எண்டு சிரிப்பார். பார்க்கும் போதே நகைச்சுவையாக இருக்கும்.

மற்றவர் சொன்னார்: அட... நீ கூட சிரிக்கும்போது நகைச்சுவையாகத்தான் இருக்கும். ஒருக்கா... சிரிச்சுக் காட்டன் எங்களுக்கு.

முதலாமவர்: நான் கோமாளிகள் கூட இருந்தாத்தான் சிரிப்பன்.

இரண்டாமவர்: (ஹா...ஹா....ஹா...ஹா...ஹா எண்டு விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார்.) நானும் அப்பிடித்தான்.

என்ன விளங்கைல்லயா? பக்கத்தில இருந்த எனக்கும் தான் முதல்ல விளங்கல்ல... ஆனா... விழுந்து விழுந்து சிரிச்சன்.. ஏனெண்டா... Joke சொன்னா சிரிக்கத் தெரியோனும்.

Friday, February 17, 2006

அறிவுக்களஞ்சியம்

வெளிநாட்டில் வாடைக்காற்று வீசுகிறது. (அது சரி, வாடைக்காற்று என்றால் என்ன?... நல்ல வார்த்தை, பாவிச்சிட்டன், விடுங்கோ...)

அவுஸ்ரேலிய இன்பத்தழிழொலியில் அறிவுக்களஞ்சியம் என்னும் நிகழ்ச்சி 200வது வாரத்தை கொண்டாடுகிறது. திரைப்படங்களின் வெற்றிவிழாக் கொண்டாடும் தழிழர்கள் இப்படியான நிகழ்ச்சிகளையும் கண்டுகொள்வார்களா?

2000ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை வெற்றி நடைபோடுகிறதென்றால் அது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விடயம். அதை நடத்திக்கொண்டிருக்கும் கானா பிரபாவிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

அவருடைய தனிப்பக்கம்... http://www.kanapraba.blogspot.com/ பாருங்க....

Wednesday, February 15, 2006

என்னை கவர்ந்தவர்...





ஆங்கில செய்திகளைப் படித்துக்கொண்டிருக்கும்போது கண்ணில் பட்ட ஒன்று என்னைக் கவர்ந்தது. அது....

It's not for me to tell the crowd how to treat a player, but he's a fantastic bowler and people should probably realise they won't always have the chance to watch a player of that quality."

Steve Waugh on Muttiah Muralitharan

இதில யாரை பிடிக்கும் எண்டு கேக்கிறியளா? மற்றவர்களைக் கூட புகழக் கூடிய மனமும் மற்றவர்களுக்கு உதவும் மனமும் கொண்டவரைத்தான்.

நீ எனக்காக அழவேண்டாம்

எதை நீ கொண்டு வந்தாய் எதை நீ கொண்டு செல்வதற்கு? பிறந்த பொழுதும் அழுகின்ற மானுடா, இறக்கும் வரையில் அழுகை ஏனடா?

உண்ண உணவில்லை என்று அழு, உடுக்க உடையில்லையா? அழு. அதை விட்டு, தலைவலிக்கும் தேவையில்லாத சோகங்களுக்கும் அழுவதும் ஏன்? ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறது வாழ்வென்றால் போராடும் போர்க்களமே.

அட... என்ன அட்வைஸ் எண்டு நினைக்கிறீங்களா?சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

Monday, February 13, 2006

மெல்பண் மலரே...


ஐயோ நான் யாரையும் குறிப்பிடவில்லை. கடந்த வார இறுதிக்கு, மெல்பண் போனன். அங்க இருக்கிற கார் number plate எல்லாம் Melbourne the Garden City எண்டு போட்டிருந்தது. அப்பத்தான், உந்த இந்தியன் படப் பாட்டு ஞாபகம் வந்தது. அங்க மலர் இருக்கோ இல்லையோ... நல்ல சனம் இருக்கு.


நாங்க சிட்னில இருந்து, கான்பரா (அவுஸ்ரேலிய தலைநகரம்) சென்று அண்ணாவையும் கூட்டிக்கொண்டு மெல்பண் போனம். ( சுமார் 1000 கிமீ). உள்ளுக்க போனால், e toll தான் எல்லா Motor Wayகளிலும். எங்களுக்கு சிட்னில உதெல்லாம் பழக்கமில்லை. பெரிய கரச்சல். ஆனா, மெல்பண் சனம், நடுச்சாமம் 3 மணிக்கு தொலைபேசில வழிகாட்டிச்சினம். அவர்களுக்கு நன்றிகள்.

நண்பர் பாலா அண்ணாட திருமணத்திற்குதான் போனம். அங்கத்தய சனம் தேவையான உதவிகள் எல்லாம் செய்து தந்திசினம். தங்கிறதுக்கு இடம், தொலஞ்சபோது வீதி காட்டி, இப்பிடி பல உதவிகள். அங்கத்தய ரோடுகள் எல்லாம், நல்ல பெரிசு. கோயில் தேரோடுகிற விதிகள் மாதிரி. அகலம்
.
என்ன பெரிய குழப்பம் எண்டால், பெரிய ரோட்டில போய் கொண்டிருக்கையில் அடிடா U turn என்டு சொல்லுவாங்கள். பெரிய குழப்பம். பிறகு, Red light Camera and Speed Light Camera Warnings ஒண்டும் போட மாட்டினம். கிட்டத்தட்ட ஒவ்வொரு பாலத்திற்கு கீழயும் கமரா இருக்குது. சரியா பயந்து பயந்துதான் ஓடினது. எங்கட சிட்னிக்கு வந்த பிறகுதான் துணிவே வந்தது.

அடிடா U Turn... அசரிரீயோ?

Thursday, February 09, 2006

குருபார்வை 2



தமிழ் பெடியள் இருக்கிற சித்திரத்துக்குள்ள HiPHoP பாடல்கள்ல மோதிக்கொள்கிறார்கள். சிரிக்கிறதா? அழுகிறதா? பெரிய 2 PaC, 50 CenT எண்டு நினைப்பு. GanG, FiGHTஸ் over music. What the hell are you trying to achieve? யாரைப் பற்றி கதைக்கிறன் எண்டு நினைக்கிறிங்களா? ஓர் சில உதாரணங்கள்...

Bad Squad... WEBSITE: http://www.badsquad.com/
akniputhraa: WEBSITE:
http://www.i-bands.net/audiovault/bands/1425/news.php

நீங்களும் போய் பாருங்க... என்ன கறுமமோ?

Monday, February 06, 2006

குறைகளும் குரைப்பதும்

ஏதாவது உருப்படியாய் செய்யத் தொடங்கினால், குறை கண்டு பிடிக்கிறது எங்கட ஆக்களுக்கு கற்கண்டு சாப்பிடுற மாதிரி. கதம்பமாலை எண்டு ஒரு நிகழ்ச்சி செய்தம். சரி, தொடர்ந்து படியுங்கோ....

குறை 1: கலாச்சார நிகழ்வில பட்டிமன்றம் வைச்சது பிழை... (கடவுளே ...)

குறை 2: ஆங்கில மோகம் அதிகம்... ( ஒரு டான்சில ஆங்கில பாட்டு சேர்த்ததுக்கு)

குறை 3: இலங்கை நிகழ்ச்சிகளுக்கு கிட்டயும் வராது (உண்மையாவா?...)

அட என்னத்தா சொல்வேனுங்கோ..... அடி நெஞ்சு எரியுதுங்கோ.....

குருபார்வை 1

தமிழ் வாழ்க....

சிட்னி முருகன் கோயிலில் அவுஸ்ரேலிய கம்பன் கழக அங்குரார்ப்பண நிகழ்வுக்கு போனேன். கம்ப வாரிதி ஜெயராஜ்,கம்பன் கழக முன்னாள் தலைவர் திருநந்தகுமார், டொக்ரர் மனமோகன் உட்பட அருமையாக நடந்தது நிகழ்வு.

மேடையில் முழங்கினார் ஒருவர். தமிழ் அழிகிறது, அசைகிறது, அந்த வானில் மறைகிறது. நல்லாத்தான் பேசினியள்,

ஆனா, போன வருசம், கலாச்சார நிகழ்ச்சி ஒன்ட இங்கிலிசில ஒழுங்கு செய்தது நீங்கதானே?

தமிழ் பிரியரே.....


தமிழ் பிரியர் எண்டு புகழப்பட்ட ஒருவர், அருமையான மனிதர், எளிமையானவர், சமூக சேவகன், ஆனா அவற்ர மகளோட என் அம்மா கடந்த மாதம் பேச வேண்டி இருந்தது. பேசி முடிந்ததும் அம்மாக்கு சரியான கோபம். என்ன நடந்தது எண்டால்:

அம்மா: அப்பாவோட கதைக்கலாமா?
தமிழ்ப் பிரியரின் மகள்: Sorry, I can't speak Tamil.....

தமிழ் பிரியரே, சிரிக்கிறதா? அழுகிறதா?

Saturday, February 04, 2006

என்ன சொல்லுறது?

என்ன சொல்லுறது? சிட்னில நடக்கிறதுக்கள பார்த்திட்டு சிரிக்கிறதா, அழுகிறதா...

நேற்றுதான் கோயிலுக்குப் போனான். அங்க முருகன் நல்ல அழகாக இருக்கிறார். ஆனா, வாற சனம் கும்பிட வருதா இல்லை கொசிப்படிக்க வருதா? சந்தேகமாக இருக்கு.

ஒருத்தர் சொல்லுறார்: சிட்னில பெட்டைகளுக்கு கலாச்சாரம் தெரியல மச்சான்.
மற்றவர் சொல்லுறார்: உண்மைதான். சேலைல திரியிற பெட்டைகளை காணகிடைக்கிதில்லை,

அது சரி, நீங்க ரெண்டு பேரும் இப்ப என்ன போட்டிருக்கியள்?

கிருஷ்ணா

எதோ எனக்கும் கொஞ்சம் கவிதை எழுத தெரியும்.. கடவுளிடம் கடன் கேட்கிறேன்.. மனிதன் ஆகிவிட்டேனே..


குழந்தை மனம் வேண்டுமடா கிருஷ்ணா
குலையாத நிலையதன மனம் வேண்டுமடா
அழும்போது தெளிவு வேண்டுமடா கிருஷ்ணா
அழுகையும் ஆனந்த கண்ணீராக வேண்டுமடா

தொல்லையற்ற தூக்கம் வேண்டுமடா கிருஷ்ணா
தொய்வற்ற பொய்யற்ற தோழமை வேண்டுமடா
இல்லையென்று சொல்லா மனம் வேண்டுமடா கிருஷ்ணா
இடர்களை எதிர்கொள்ளும் இதயம் வேண்டுமடா

எதிரியையும் வாழ்த்திட வேண்டுமடா கிருஷ்ணா
எண்ணங்கள் விண்ணையும் விஞ்சிட வேண்டுமடா
கதியற்றோர் குறை தீர்க்க வேண்டுமடா கிருஷ்ணா
கவலையற்ற உலகினை கொஞ்சிட வேண்டுமடா

தூய்மையான தாய்மை வேண்டுமடா கிருஷ்ணா
துன்பத்திலும் புன்னகைக்கும் நெஞ்சம் வேண்டுமடா
பொய்மையற்ற தூய்மை வேண்டுமடா கிருஷ்ணா
பொழுது வந்ததும் போகின்ற உயிர் வேண்டுமடா

வணக்கம்

அனைவருக்கும் வணக்கம்

இது என்னுடைய பக்கம். நேரம் இருந்தால் நினைத்ததை வடிக்க வழியமைத்த இணையத்திற்கு நன்றிகள்.