எதோ எனக்கும் கொஞ்சம் கவிதை எழுத தெரியும்.. கடவுளிடம் கடன் கேட்கிறேன்.. மனிதன் ஆகிவிட்டேனே..
குழந்தை மனம் வேண்டுமடா கிருஷ்ணா
குலையாத நிலையதன மனம் வேண்டுமடா
அழும்போது தெளிவு வேண்டுமடா கிருஷ்ணா
அழுகையும் ஆனந்த கண்ணீராக வேண்டுமடா
தொல்லையற்ற தூக்கம் வேண்டுமடா கிருஷ்ணா
தொய்வற்ற பொய்யற்ற தோழமை வேண்டுமடா
இல்லையென்று சொல்லா மனம் வேண்டுமடா கிருஷ்ணா
இடர்களை எதிர்கொள்ளும் இதயம் வேண்டுமடா
எதிரியையும் வாழ்த்திட வேண்டுமடா கிருஷ்ணா
எண்ணங்கள் விண்ணையும் விஞ்சிட வேண்டுமடா
கதியற்றோர் குறை தீர்க்க வேண்டுமடா கிருஷ்ணா
கவலையற்ற உலகினை கொஞ்சிட வேண்டுமடா
தூய்மையான தாய்மை வேண்டுமடா கிருஷ்ணா
துன்பத்திலும் புன்னகைக்கும் நெஞ்சம் வேண்டுமடா
பொய்மையற்ற தூய்மை வேண்டுமடா கிருஷ்ணா
பொழுது வந்ததும் போகின்ற உயிர் வேண்டுமடா