Wednesday, December 03, 2008

எம்மினமே… எம்சனமே…


வாழ்வில் எத்தனை போராட்டங்கள், எத்தனை சோதனைகள், எத்தனை ஆண்டுகள்… இன்றும் எம்மவர் தாயகத்தின் காற்றை சுவாசித்தபடி போரின் கோரத்தை வாசித்தபடி உண்பதற்கு உணவின்றி உடுப்பதற்கு உடையின்றி அகதிகளாய் வீதியிலே அலைகின்றனர். மீண்டும் மீண்டும் இந்த வேதனைகளைத் தாங்குகின்ற உள்ளங்களின் நெஞ்சுரத்தை பாராட்டுவதா? சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு கண்ணீர் விடுவதா என்று தெரியவில்லை.


புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாமோ, வருடத்திற்கு ஓர் தடவை எம் நாட்டு அரசை குறிவைத்து கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்துகிறோம். நிகழ்வுகள் வைத்து தாயகத்திற்கு நிதியுதவி அளிக்கின்றோம். ஆராயந்து பார்த்தால் எம்மால் முடிந்தது அவ்வளவுதான். முப்பது ஆண்டுகளாய் தமிழினம் புலம்பெயர்ந்து வெளிநாட்டிலேயே பிறந்த தமிழ் தெரியாத தலைமுறையும் உருவாகிவிட்டது. வருகின்ற நாட்களில், அதாவது இன்னும் ஓர் தலைமுறை இடைவெளியில் இந்த முயற்சிகளை முன்னெடுப்பதற்கும் தாயக உறவுகளுக்கும் யார் இருக்கப்போகிறார்கள். இதற்கு எமக்கு உடனடியாக அமைதி வேண்டும்.



போரற்ற தாயகத்தை கண்டிராத தலைமுறையாக நாம் வாழ்ந்து விட்டோம். பெற்றோரும் மற்றோரும் யாழ்தேவி அனுபவங்களையும் தம் பாடசாலை நாட்களையும் சொல்லும்போது நாம் எதையோ இழந்துவிட்டோமோ என்று எண்ணத்தோன்றும். பனையோடு உறவாடி செம்மண்ணோடு விளையாடிய பொழுதுகளை நாம் பெறமுடியாது. இயந்திர வாழ்விலே இயற்கையோடு உறவாட எமக்கு நேரமேது? ஆனாலும் எம் தாயகத்திலே அமைதி நிலவி அங்கும் சமாதானப் புறாக்கள் பறக்கவேண்டும் என்ற ஆசை என்றும் நெஞ்சிலே இருக்கிறது.


ஓர் காலத்தில் படிப்பிலும் தொழில்நுட்பத்திலும் விஞ்சி நின்ற தமிழினம் இன்று இருப்பதற்குகூட இடமில்லாத இனமாக மாறியிருக்கிறது. கணணியைக் காணாத தலைமுறை உருவாகியிருக்கிறது. படிப்பதற்கு வாய்ப்பற்ற குழந்தைகள் எவ்வாறு எம் தாயகத்தைக் கட்டியெழுப்ப முடியும் ? மனத்தளவில் சின்னாபின்னமாக்கப்பட்ட எதிர்காலத் தலைமுறை எவ்வாறு சமுதாயக் கட்டமைப்பை உருவாக்கமுடியும்? போர் ஓய்ந்தாலும் எம் தாயகத்திற்கு பல உதவிகளும் நிச்சயமாகத் தேவை.



முதலில் எம் தாயக மக்களின் விடிவிற்கு கேடுகெட்ட அரசியல் வழிவிடுமா? வேற்றுமைகளை மறந்து ஒற்றுமை கனியைக் கொய்ய அரசியல்வாதிகள் முயலவேண்டும். இன்னும் எவ்வளவு காலம்தான் போராட்டச் செய்திகளையும் மக்களின் அகதி வாழ்வைப் பற்றியும் செய்திகளைக் கேட்பது? இந்த நிலை மாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும். அழகான விழுதாக அமைதி இடப்பட்டு மாபெரும் விரூட்சமாக வளரட்டும்.

Tuesday, December 02, 2008

நாடகம் போட ஐடியா வேணும்

UTS தமிழ்ச் சங்கத்தின் கதம்பமாலை 2009 வருகின்ற வருடம் (வருகின்ற மாதம்) 17ம் திகதி நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் கடந்த வருடம் “21ம் நூற்றாண்டில் கரிகாலசோழன்” என்ற நாடகத்தை அரங்கேற்றியிருந்தோம். சரி விஷயத்துக்கு வருவோம்.

இந்த வருடமும் ஓர் நாடகம் போடலாம் என்று யோசித்து ஒரு கதை தேடிக்கொண்டிருக்றேன். தமிழர்களின் மாப்பிள்ளை தேடுகின்ற (மாப்பிள்ளைக்கு விலைபேசி வாங்குகின்ற) விடயத்தை நகைச்சுவையாக அணுகலாம் என்று நினைத்து ‘கதை விவாதம்’ செய்தபோது அந்த கருவில் நாடகத்தை அரங்கேற்றுவது கடினமென்று அதைக் கைவிட்டு விட்டோம்.

பழைய குருடி கதவை திறவடி என்பது போல திரும்பவும் கதை தேடும் படலம் ஆரம்பித்திருக்கிறது. தமிழர்களின் தொலைபேசியில் பேசுகின்ற பழக்கத்தை சற்றே சீண்டிப்பார்போம் என்ற ஒரு ஐடியா இருக்கிறது. உங்களுக்கும் ஏதாவது ஐடியா அல்லது script இருந்தா உங்களுக்கு புண்ணியமா போகும்.

Saturday, November 29, 2008

மும்பைத் தாக்குதலும் பத்துக் கேள்விகளும்



கனவில்கூட நினைத்துப் பார்க்காத கொடூரம் மும்பை நகரில் அரங்கேறி ஓய்ந்திருக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு சற்றே பழகிப்போன விடயமாக இருந்தாலும் உலக ஊடகங்களின் கவனம் இந்த விடயத்தில் ஒரேயடியாக திரும்பியதால் எங்கள் உள்ளங்களையும் கரையவைத்துவிட்ட சம்பவம் என்றே இதனைக் குறிப்பிடவேண்டும். இன்றைய தினம் இந்த அகோர (காட்டு மிராண்டி)தனமான தாக்குதல்கள் முடிவுக்கு வந்துள்ளன என்ற செய்தி கிடைத்தது. சற்றே நிம்மதியாக இருந்தாலும் மரணித்த காயமடைந்தவர்களை எண்ணி உள்ளம் பதறுகிறது.

இந்தியாவின் வர்த்தக சந்தையாகக் கருதப்படும் முமபை நகரில் யாரும் எதிர்பாராத இந்தத் தாக்குதலினால் இதுவரை 195 பேர் இறந்துள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் 2 அவுஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், இரண்டு பேரைப் பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கப்படவில்லை. 6 அமெரிக்கர்களும் இறந்துள்ளார்கள். 295 பேர்வரை காயமடைந்துள்ளார்கள்.

சரி, இவை தகவல்களாக இருந்தாலும், அவுஸ்ரேலிய ஊடகங்கள் கேட்கின்ற கேள்விகள் சிந்திக்க வைக்கின்றன. இதனால் என்னுள்ளத்திலே எழுகின்ற பத்துக் கேள்விகள்:

  1. பாகிஸ்தானைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் இந்தியர்களை எதிரிகளாக நினைத்தால் வெளிநாட்டவர்கள் வந்து தங்குகின்ற இடங்களை ஏன் குறிவைக்க வேண்டும்? மேலை நாட்டவர்களை குறிவைத்து நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் வழமையாக தலிபான் அமைப்பால் நடாத்தப்படுவதால் இந்தத் தாக்குதலுக்கும் தலபான் அமைப்புக்கும் என்ன தொடர்பு?
  2. வல்லரசுகளில் ஒன்றாக கருதப்படும் இந்தியா இவ்வாறான ஓர் சிறிய விடயத்தில் எவ்வாறு கோட்டைவிட்டது? (இந்தியாவின் பாதுகாப்புத் தொழில்நுட்பம் ஈழத்தமிழர்களை குறிபார்த்துத் தாக்குகிறதாமே? )
  3. கிரிகட்டின் அறிவிக்கப்படாத தலைநகரமாக இருக்கின்ற இந்தியாவில் இனி வெளிநாட்டவர் கிரிகட் விளையாடச் செல்வார்களா? இதனால் கிரிகட் உலகிற்கு என்ன தாக்கங்கள் இடம்பெறப் போகின்றன?
  4. இந்தியாவில் outsource செய்கின்ற அவுஸ்ரேலிய நிறுவனங்கள் அவற்றை எவ்வாறு தொடரவிருக்கி்ன்றன? இதனால் இந்தியாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்படப் போகின்றது
  5. இந்தத் தாக்குதல் அமெரிக்காவின் செப்ரெம்பர் 11 தாக்குதல்களுடன் ஒப்பிடப்படலாமா?
  6. இந்தியாவில் தவித்திருந்த அவுஸ்ரேலியர்களுக்கு ஏன் உடனடி உதவிகள் செய்யப்படவில்லை ?
  7. இந்தத் தாக்குதலினால் தீவிரவாதிகள் அடைந்த பலன் என்ன? சொல்கின்ற செய்தி என்ன? மக்களைக் கொன்று சந்தோசிப்பவர்கள் நல்லெண்ணம் படைத்தவர்களாக எவ்வாறு இருக்கமுடியும்?
  8. இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்ட இந்த கொலைவெறியர்களுக்கு வயது இருபதுதான் இருக்கும். இந்த இளரத்தங்கள் ஏன் வெறியர்களாக மாற்றப்பட்டன? இதுதான் தீவிரவாதமா?
  9. இலங்கையில் தமிழர்களைக் கொல்வதற்கு துணைபுரியும் இந்திய இராணுவத்தால் அவர்களையே நம்பியிருக்கும் இந்தியக்குடிமக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் ஏன் தரமுடியவில்லை?
  10. 'War against terrorism' என்ற வாதம் உலகில் தீவிரவாதத்தை அடக்கவும் இல்லை, அசைக்கவும் இல்லை. இந்த மாதிரியான வெறித்தனமான நடவடிக்கைகளுக்கு என்றுதான் மக்கள் இனம் முடிவு காணப்போகிறது?

Saturday, November 22, 2008

வாழ்க்கை - ஓர் கிறுக்கல்


போராட்டமே வாழ்க்கையென்று
வாழ்பவர்கள் எத்தனையோ
வாழ்க்கையே போராட்டமாய்
மாறுயதும் ஏன்தானோ

சின்ன வயதினிலே
சிரிப்பதும் அழுவதும்
அழகென்றார் சிலர்
அன்பு காட்டவோ பலர்

பள்ளிக்கூடம் போகையிலே
பாடப்புத்தகம் பாரமென்று
சைக்கிளுக்கு அடப்பிடித்து
அழுதிட்ட நினைவுகள்

சைக்கிளும் வாங்கிவிட
ஸரைல் காட்டும் அவதிலே
சேற்றிலே வழுக்கி விழுந்து
பெற்றிட்ட விழுப்புண்கள்

ஊருக்கு ஆமி வர
ஊரே பயந்தோட
இரவோடு இரவாக
இடப்பெயர்ந்த ஞாபகங்கள்

இளமைத் துடிப்பினிலே
இரவெல்லாம் ஊர்சுற்றி
விடிந்தபின்பு வீடுவந்து
வாங்கிக்கட்டிய பொழுதுகள்

வைரமுத்தின் வரிகளிலே
தமிழ் படித்து சொல் பிடித்து
வார்த்தைகளே கிறுக்கல்களாய்
வரைந்திட்ட கவிதைகள்

கண்காணாக் காதலிக்காய்
கவிதையிலே கடிதமெழுதி
பொழுதெல்லாம் செலவாக
வரவானவானதோ குப்பைகள்

எல்லாமே கரைந்தோட
எந்திரமே வாழ்க்கையாக
ஏதோ ஒன்றேத் தேடி
எங்கெங்கோ பயணங்கள்

வாழ்க்கையின் பொருளைத்தேடி
பொருளற்ற வாழ்வைத்தேடி
காலமும் விரைகின்றது
கனவுகளும் கலைகின்றன

போராட்டமே வாழ்க்கையென்று
வாழ்பவர்கள் எத்தனையோ
வாழ்க்கையே போராட்டமாய்
மாறுயதும் ஏன்தானோ

Wednesday, November 19, 2008

காலத்தை வென்ற பாடல்

ஓர் சில பாடல்கள் கேட்கும்போது அவை உள்ளத்தைத் தொட்டுவிடுவதுண்டு. ஒரு திரைப்படம் வந்து பல ஆண்டுகளான பின்பும் அந்தப்படத்தின் பாடல்களைக் கேட்கும்போது அவை இதயத்தைத் தொட்டால் அவையே காலத்தை வென்ற பாடல்களாகும். அந்தவகையில் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படப்பாடல்கள் காலத்தை வென்ற பாடல்களாகக் கருதப்படலாம்.

கண்டுகொண்டேன் வந்தது யாரென்று கண்டுகொண்டேன் என்கின்ற பழைய ஜெமினிகணேஷன் திரைப்படப்பாடல் வரிகளை இந்தத்திரைப்படத்தின் பெயராக்கியுள்ளார்கள். சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி என்ற ஆங்கில நாவலின் தழுவலாக வந்த ஆங்கிலத்திரைப்படத்தை சுட்டு ராஜிவ்மேனன் எடுத்ததிரைப்படம்தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். ஆனாலும் இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் இசைப்புயலின் இசையில் மாபெரும் வெற்றிபெற்றன. குறிப்பாக 'சந்தனத் தென்றலை' என்ற பாடல் விருது பெற்றதாக ஞாபகம். ஆனாலும் காதலின் துயரத்தை, சோகத்தை, தாக்கத்தை எடுத்துரைக்கின்ற எங்கே எனது கவிதை பாடலே என்னுள்ளத்தை இன்றைய நாட்களில் கவர்ந்த பாடல். ஓர்நாள் கன்பரா பேரூந்திலே சென்றுகொண்டிருந்தபோது இந்தப்பாடல் என் ipodஇல் ஒலித்தது. பஸ்ஸிலே இருந்து கத்தாத குறை, ஆனாலும் கலாச்சாரம் பார்க்கும் கன்பராவாசிகளை நினைத்து பாடமால் விட்டுவிட்டேன்.

சரி.. விஷயத்திற்கு வருவோம். உயிரை உருக்குகின்ற வைரமுத்துவின் வரிகளை மெச்சுவதா? உணர்வு கொடுத்துப் பாடும் சின்னக்குயில் சித்ராவை பாராட்டுவதா? இடையிடையே சந்தம் சேர்க்கும் சிறினிவாஸை போற்றுவதா? இசையுடன் விடையாடும் இசைப்புயலை வணங்குவதா? ஒவ்வோர் வரியும் இரத்த நாளங்களை கிறங்கடிக்க வைக்கின்றன.

குறிப்பாக,
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்
போன்ற வரிகள் காதலின் வேதனையை அழகாக சொல்கின்றன. வைரமுத்துவை மிஞ்ச இன்னோர் கவிஞன் வருவானா என்பது சந்தேகமே. வந்தாலும் இசைப்புயல் - வைரமுத்து கூட்டணி கிடைத்திடுமா?


எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்றும் ஏங்குதே

வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று
ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பக் கணம் கேட்குதே கேட்குதே...

பாறையில் செய்ததும் என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

இதைக் கேட்டு மகிழ..
இங்கே அழுத்துங்கள்

இந்தப்பாடலை பார்த்து மகிழ..
இங்கே அழுத்துங்கள்








வெள்ளைக்காகம் உண்மையா?


காகத்தின் நிறம் கறுப்பு என்று படித்திருக்கிறோம். கறுப்பு நிறத்தில் காகம் இருப்பதனால் அதனை துன்பத்தின் அடையாளமாக பார்க்கிறோம். ஆங்கிலேயர்களுக்கும் இந்த நம்பிக்கை இருக்கிறது. ஆனால் உலகிலே வெள்ளைக்காகம் இருக்கிறதா என்ற கேள்வியைக் கேட்டார் ஒருவர். சரி, Google Searchஇல் தேடிப் பார்ப்போம் என்ற தேடினால் பல விசித்திரமான விடயங்களும் படங்களும் கிடைத்தன. வெள்ளைக்காகம் எம் கண்ணிலேபடுவது அரிது, அவற்றை நீ்ங்கள் கண்டுவிட்டால் உங்களுக்கு விசித்திரமான ஏதோவொன்று நடைபெறப்போகிறது என்று நம்புபவர்களும் உண்டு. ஆபிரிக்காவில் வெள்ளைக் கழுத்துடைய Ravens (காகத்தின் ஓர்வகை) இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்காவிலும் இப்படியான வெள்ளைக்காகங்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் சில ஆராய்ச்சியாளர்கள் வெள்ளைக்காகம் இருப்பதை மறுத்தும் இருக்கிறார்கள்.


White crow என்ற கவிதை, தகவல் சஞ்சிகை ஒன்று வருடத்திற்கு நான்கு தடவைகள் அமெரிக்காவில் பிரசுரிக்கப்படுகின்றது. அத்துடன் வெள்ளைக்காகம் என்பது கவிஞர்கள் பலருடைய சிந்தனைகளையும் தூண்டிவிட்டிருக்கிறது. அதேபோல விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட ஆக்கங்களில் 'வெள்ளைக்காகம்' என்ற வார்த்தை நடக்கமுடியாத விடயங்களை எடுத்துக்காட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.


காதல் சடுகுடு படத்தில் விக்ரம் சொல்வதுபோல் ' வெள்ளைக்காகத்துடன் குஞ்சும் பறந்தது' என்றால் நம்பத்தான் வேண்டும். நீங்களும் வெள்ளைக் காகத்தைப் பார்த்து இருந்தால் எனக்கு அறியத்தாருங்கள்.

Thursday, November 13, 2008

சிலந்தி விற்று கடன் கட்டலாமா

உங்களுக்குக் கடன் தொல்லையா? கடன்கட்ட சிலந்தி விற்ற கதை இதுதான. படித்துப் பாருங்கள், படிக்க மட்டும்தான், பரீட்சித்துப் பார்க்க இல்லை..



Tuesday, November 11, 2008

அழைப்பு = வைரமுத்துவின் கவிதை

கவிதைகளைக் கொள்ளையடிப்பதனால் (?) நான் கவிதைத் திருடன் ஆகிறேன். ஆனாலும் என்ன செய்ய? வைரமுத்துவின் வரிகளை நான் பிரசுரிக்காமல் யார் பிரசுரிப்பது. கவிதையை படியுங்கள், ரசியுங்கள், உங்கள் பாராட்டுக்கள் வைரமுத்துவுக்கும் நான் கவிதையைப் பெற்றுக்கொண்டவருக்கும்(சுட்டுக் கொண்டவருக்கும்?) சேரட்டும். இதோ கவிதை....


தயவுசெய்து
என்னை தொல்லைசெய்!

தயவுசெய்து
என்னை கொள்ளையடி

கழுத்தடியில்
ஒரு
செல்ல கடி கடி

கூந்தல் கலைத்து
பூக்களை உதிர்த்துவிடு

ஓடிப்பிடித்து
என்னை உருக்குலைத்து
போடு

குளித்துவரும்
என்னை மீண்டும்
அழுக்காக்கு

எதிர்பாரா இடத்தில்
என்னை தீண்டு

எவ்வளவு இயலுமோ
அவ்வளவு தழுவு

எங்கே என் உயிர் எண்டு
கண்டு பிடி

அதன்
இட வலம் தொடு

இது தான்
இது தான் நான் கேட்டது

உதட்டு எச்சிலால்
உடல் பூசு

முத்தமிட்டு
என் மூச்சை
நிறுத்து

இது ஒன்றும்
ஒரு வழிப்பாதையல்ல
என் பங்கு செலுத்த
எனக்கும் இடம் கொடு

அங்கங்கே பரவு

எலும்பின் மச்சைகளின்
ஊருடுவு

மார்பக பள்ளத்தில்
முகம் வைத்து மூச்சுவிடு

மேகங்களுக்கு இடையில்
நட்சத்திரம் தூங்கினாலும்

இலைகளுக்கு இடையில்
காற்று தூங்கினாலும்

என் கண்கள்உனக்காக
இரவெல்லாம்
விழித்திருக்கும்

உனக்கில்லாத உரிமையா?

பூனையின் பாதம்
பொருத்தி
பொசுக்கெண்டு வந்து
புடவையிழு!

தீவிரத்தால் என்னை
திணறவை

என்னை தீண்டி விட்டு
எங்கேனும் ஒழிந்து கொண்டு
நித்தம் ஒரு தடவை
என்னை அழவை

என் பெண்மையின்
பரிபூரணமே!

என்
வெற்றிடம் வழியே
நிறைந்த நிறைவே

தாழாத தணங்கள்
தாழ்ந்தன உனக்காக!

ஆகாய கங்கை
பாய்ந்தது
உனக்காக
வா

என்னை வலி செய்
உயிர் பருகி என்னை
ஒலிசெய்

என்னுயிர் பயிராகும்
நீ பதித்த பள்ளத்தில்

எனக்குள்ளே பூப்பொழியும்
நீ முட்டும் அதிர்வில்

உன் நகர்த்தலுக்காக
துடிக்குது என் ஆடை

உன் நகம்
கிழிக்க
வீங்குது என் மார்பு!

தொட்டுக்கொண்டுறங்கும்
சுகம் ஒண்டு கருதி
உடல் என்ற உலையில்
கொதிக்குது என்குருதி!

நீ தந்த சுகம் எல்லாம்
நெற்றியில் தீ எரியும்
தியானத்தில்
வந்ததில்லை

வில்லாய் விறைக்கும்
கலவியில் கண்டதில்லை
பிரசவம் முடிந்த
பெரு மூச்சில்
கண்டதில்லை

எங்கே
மீண்டும் ஒரு முறை
முந்தானைக்குள் புகுந்து
முயல் குட்டியாகு!

தட்டாதே
தாய் சொல்லை கேள்
பத்துமாதம்
என் வயிறு சுமந்த
பிஞ்சு பிரப்ஞ்சமே!

-வைரமுத்து-

Friday, November 07, 2008

முதல் முதலாய் அம்மாவுக்கு...


என் மனதைக் கவாந்த கவிதை வைரமுத்துவின் கவிதையொன்று... இதனை சுட அனுமதித்த நண்பருக்கு நன்றி. இந்தக் கவிதையிலே வைரமுத்துவின் கவிஞன் என்ற இறுமாப்பும் ஓர்வித வெறுப்பும் தெரிகிறது. படித்துப்பாருங்கள்.


ஆயிரம் தான் கவி சொன்னேன்
அழகழகாக பொய் சொன்னேன்
பெத்தவளே உன் பெருமை
ஒத்தவரி சொல்லலையே...

காற்றெல்லம் மகன் பாட்டு
காகிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லம் மகன் பேச்சு
உன் கீர்த்தி எழுதலையே...

எழுதவோ படிக்கவோ...
ஏலாத தாய் பற்றி
எழுதியென்ன லாபம் எண்டு
எழுதாம போனேனோ?

பொன்னையாத்தேவன் பெத்த
பொன்னே குலமகளே...
என்னை புறம் தள்ள
இடுப்பு வலி பொறுத்தவளே...

வைரமுத்து பிறப்பான் எண்டு
வயித்தில் நீ சுமந்ததில்லை...
வயித்தில் நீ சுமந்ததொன்னு
வைரமுத்து ஆகிருச்சு...

கண்ணு காது மூக்கோடு
கறுப்பா ஒரு பிண்டம்
இடப்பக்கம் கிடக்கையில
என்னன்னு நினைச்சிருப்ப...?

கத்தி எடுப்பவனே...?
களவாட பிறந்தவனோ...?
தரணி ஆள வந்திருக்கும்
தாசில்தார் இவன் தானோ...?
இந்த விவரங்கள்
ஏதொன்னும் தெரியாம
நெஞ்சூட்டி வளர்த்த உன்னை
நினைச்சா அழுகை வரும்...

கத கதன்னு
களிக்கிண்டி
களிக்குள்ள குழி வெட்டி
கருப்பட்டி நல்லெண்ணை
கலந்து தருவாயே...

தொண்டையில
அது இறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையில இன்னும்
மச மசன்னு நிக்குதம்மா...

கொத்தமல்லி வறுத்து வைச்சு
குறுமிளகாய் இரண்டு வைச்சு
சீரகமும் சிறுமிளகும் சேர்த்துவைச்சு
நீர் தெளிச்சு
கும்மி அரைச்சு
நீ கொழ கொழன்னு வடிக்கையில
அம்மி மணக்கும்
அடுத்த தெரு மண மணக்கும்...

தித்திக்க சமைச்சாலும்
திட்டிக்கிட்டே சமைச்சாலும்
கத்தரிக்காய் நெய் வடியும்
கருவாடு தேன் ஒழுகும்...

கோழிக்குழம்பு மேல
குட்டி குட்டியா மிதக்கும்
தேங்காய்ச்சில்லுக்கு
தேகமெல்லம் எச்சி ஊறும்...

வறுமையில நாம பட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்.

பாசம் உள்ள வேளையில
காசு வந்து கூடலையே...
காசு வந்த வேளையில
பாசம் வந்து சேரலையே...

கல்யாணம் நான் செய்து
கதியற்று நிக்கையிலே
பெத்த அப்பன் சென்னை வந்து
சொத்து எழுதி போன பின்னே...

அஞ்சாறு வருசம்
உன் ஆசைமுகம் பாக்காம
பிள்ளை மனம் பித்தாச்சே
பெத்த மனம் கல்லாச்சே...

படிப்பு படிச்சுகிட்டே
காசு அனுப்பி வைச்ச மகன்
கைவிட மாட்டான்னு கடைசிவரை
நம்பலையே....

பாசம் கண்ணீர்
பழையகதை எல்லாமே
வெறிச்சோடிப்போன வேதந்தம்
ஆகிருச்சே...

வைகையில ஊர் முழுக
வல்லூரும் சேர்ந்தழுக
கைப்பிடியா கூட்டி வந்து
கரைசேத்து விட்டவளே!

எனக்கொன்னு அனதுன்னா
உனக்கு வேற பிள்ளையுண்டு...
உனக்கு எதும் ஆனதுன்னா
எனக்கு வேற தாயிருக்கா?

-வைரமுத்து-

Thursday, November 06, 2008

தூரத்து நிலவு.. வானலையில் பத்து வாரம்..


சிட்னியிலிருந்து கன்பரா வந்ததும் என்ன செய்வது என்று ஒரே குழப்பம். நண்பர்களும் பெரிதாக இல்லை, பல்கலைக்கழகத்திலும் படிப்பதற்கென்று பெரிதாக இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தபோது வந்த ஐடியாதான் 'தூரத்துநிலவு'. இன்பத்தமிழ் ஒலியில் வாரந்தோறும் ஒலிபரப்பும்வகையில் நிகழ்ச்சி செய்யவதாக திட்டம்.

நிகழ்ச்சிக்கு நல்லதோர் பெயர் தேவை. யோசித்து யோசித்து மூளை களைத்துவிட்டது. அப்போதுதான் வானத்திலே தெரியும் நிலவு கண்களுக்கு இதமளிக்க ( அடடா... ) அதைப்பார்த்து கிடைத்ததுதான் இந்தப்பெயர். சும்மா விளையாட்டாக ஏதோ என்ட மடிக்கணணில (தூயதமிழ் ?...) இருந்த நாலு பாட்டுகளைப் போட்டு அடோபி மென்பொருளில் பதிவு செய்தேன். சுமார் ரகமாக அந்த ஒலிப்பதிவு அமையவே ஒரு மணிநேர வானொலி நிகழ்ச்சியை செய்து முடித்தேன். இன்பத்தமிழ் ஒலியில் செவ்வாய்க்கிழமைகளில் ஒலிபரப்பவும் ஏற்பாடு செய்து இந்த வாரத்துடன் பத்தாவது கிழமை நிறைவு பெறுகிறது.

புதிய திரைப்படப் பாடல்களை அவுஸ்ரேலியவில் வானொலிகள் ஒலிபரப்புவது குறைவு என்ற குறைபாடு இருந்து வருகிறது (கேட்பவர்கள் இன்னும் சிவாஜி காலத்திலேயே இருக்கினம்). இதனை நிவர்த்தி செய்ய புதிய பாடல்களையே பெரும்பாலும் ஒலிப்பரப்ப தெரிவுகின்றேன். ( தெரிந்தது புதுப்பாட்டுகள் மட்டும்தான், அதற்குத்தான் சும்மா பில்ட்அப்) அத்துடன் அந்தப்பாடல்கள் தொடர்புடைய விபரங்களையும் சேர்த்துக் கொள்கின்றேன்.

சனத்துக்கு பிடிக்குமோ என்ற கவலையும் இருந்தது, பலரும் இந்த நிகழ்ச்சியைக் (விரும்பி) கேட்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இணைய நேயர்களும் நண்பர்களும் கேட்பதற்காக மேலேற்றம் ( uploadக்குத் தமிழ் ?) செய்துள்ளேன். தரையிற்க்கம் செய்து கேட்டுப்பாருங்கள். வலது பக்கத்தில radio அழுத்த வேணும். சும்மா ஒரு பாட்டு download பண்ணுற நேரத்தில முடிஞ்சிடும். உங்கள் கருத்துக்கள் நிச்சயமாக மேலும் பல நிகழ்வுகளையும், ஏன் இந்த நிகழ்ச்சியையே தொடர்ந்து செய்ய உற்சாகம் கொடுக்கும்.

இலங்கை வானொலி நிகழ்வு மாதிரி இல்லாம, நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன். வருகின்ற வாரங்களில் கவிதைகளையும் சுவாரஸ்யமான தகவல்களையும் சேர்க்கலாம் என்று இருக்கிறேன் (நேரம் கிடைக்க வேணுமே)

கேட்டவங்களுக்கு நன்றி... மீண்டும் இன்னொரு பதிவில சந்திப்போம்.

Sunday, November 02, 2008

நடிகர் சங்கம், தமிழக, மெல்பண் தமிழர்களின் ஒற்றுமை சிலிக்க வைக்கிறது

கார்த்திகை முதலாம் நாள், தீபாவளி கடந்து சோகங்கள் எல்லாம் தீயிலே எரிந்து ஒற்றுமை என்னும் தீபம் ஏற்றியிருக்கிறார்கள் தமிழர்கள். இன்றைய நாள், மாபெரும் நிகழ்வாக தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் "ஈழத்தமிழர்களுக்கு" ஆதரவை எடுத்துக்காட்டுகின்ற நிகழ்வு (விழா?) அரங்கேறியிருக்கிறது. தமிழ் உணர்வாளர்கள், மனிதவுரிமை ஆதரவாளர்களின் முகங்கள் இந்த நிகழ்வை நிறைத்திருக்கின்றன. உறவுகளுக்கு ஆதரவுக் குரல்கள் முழங்கியிருக்கின்றன. தமிழா ஒன்றுபடு என்ற கோஷங்கள் காதுகளில் கேட்டுக்கின்றன. இந்நிகழ்விலே நடிகர்கள் அஜுத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டதை அனைவரும் உன்னிப்பாகக் கவனித்தார்கள். வழமையாக எந்நிகழ்விலும் கலந்து கொள்ளாத அஜுத் போன்றோர் இந்த நிகழ்விலே கலந்து கொண்டு 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' என்று பேசியது புலம்பெயர்ந்த தமிழர்கள் காட்டிய ஒற்றுமையின் விளைவா என்ற சிந்தனைகளும் எழத்தான் செய்கின்றன. அதேபோல் அர்ஜுனும் தன்னுடைய நன்றிக்கடனை தமிழர்களுக்குத் தெரிவித்திருந்தது சந்தோசத்தை அளித்தது.


நடிகர்கள் சென்னையிலே திரண்டிருந்தவேளையிலே தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம் கவனிக்க வேண்டிய ஓர் விடயம். ஒவ்வொரு நாள் உணவிற்கும் உழைக்கின்ற இந்த உறவுகள், தம் உடன்பிறவா சகோதரர்களுக்காக தம் உணவை, உழைப்பைப் பற்றிக்கூட கவலைப்படாதது உண்மையிலே புல்லரிக்கவைத்தது.



இந்தியாவி்ல் இவ்வாறு குரல்கள் எழுகின்றவேளையிலே, அவுஸ்ரேலியாவில் தமிழ் இளையோர்கள் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தியிருப்பது எம்மைப் பெருமைப்படுத்தியிருக்கிறது. குறுகிய காலத்திலே ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வாக இருந்தாலும் அழகாக, நேர்த்தியாக இருந்தது. இளைய குரல்கள் தொடர்ந்தும் ஒலிக்க வேண்டும். மெல்பண் இளையோர்கள் உணர்வற்றவர்கள் இல்லை என்று நிருபிக்க வேண்டும்.


இவ்வாறாக, உலகத்தமிழர்கள் ஒருங்கிணைந்திருப்பது எம் இரத்தங்களில் நம்பிக்கையைப் பாய்ச்சி இருக்கின்றன. உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்கச் சொல்வோம் உலகிற்கு. மொழி வென்றாக இனம் ஒன்றாக புதுவழியை எடுப்போம் விடிவிற்கு.

Wednesday, October 29, 2008

நானும் வைரமுத்துவும்

நான் வைரமுத்துவிடம் சுட்ட எத்தனையோ கவி வரிகள் இருக்கின்றன. சிவனே என்று இருந்தவனை கவிதைபோல் கிறுக்கவைத்தவர் வைரமுத்து. அதனால் அவரிடமிருந்து வரிகளைச் சுடுவது ஒன்றும் பிழையல்ல. மானசீகக் குருவுக்கும் மாணவனுக்கும் இடையில் இந்த உரிமைகூட இல்லாவிட்டால் என்ன? இடையிடையே கண்ணதாசனையும் சீண்டிப் பார்ப்பதுண்டு. என்னைக் கவர்ந்த தமிழ்ப் பாடல் வரிகள் ஓர் சிலவற்றையும் என்னுடைய கவிவரிகள் சிலவற்றையும் தொகுத்து அளித்துள்ளேன். சில பாடல்களைக் கேட்கும்போது அவை எம் மனதைக் கொள்ளை கொண்டுவிடுகின்றன. அழகான தமிழா? பாடுகின்ற இசையா? என்னவென்று தெரியாது. தெரியவும் விரும்புவதில்லை. உங்களுக்குப் பிடித்த வரிகளையும் கருத்துக்களாய் இணைக்லாம், ஒவ்வொரு வரிகளிலும் ஆயிரமாயிரம் நினைவுகள் செறிந்து கிடக்கலாம். சரி, வாசிக்க ரெடியா?...

கடவுள்போல் கவலைகள் இல்லாதவன்...

ஆசைவைப்பதே அன்புத் தொல்லையோ...

தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்டமுகமோ?

இன்பங்களின் இறப்பு நீ.. துன்பங்களின் பிறப்பு நீ.. இரவுகளில் விழிப்பு நீ.. இளமையின் தவிப்பு நீ..

அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்... அந்தி பகல் உன்னருகே நான் வாழவேண்டும்...

கதையோடு தோன்றுமடி இதிகாசங்கள் - உன் கண்ணோடு தொடங்குதடி எனது பாடல்

காதல் என்பது போதிமரம்... காயம்பட்டால் ஞானம் வரும்... நிலையற்றது வாழ்வுதான் மானிடா... நீ நிகழ்காலத்தை வாழடா...

அலையென்று நினைத்தேன் உன்னை கரையைச் சேரும்வரை... அலையடித்த பின்புதான் உணர்ந்தேன் நீ ஆழிப்பேரலையென்று..

நீ தமிழ் என்றால் நான் பாரதியா ? பாரதிதாசனா ?

ஒருமுறையாவது சந்திக்கவேண்டும் உன்னை...
எங்காவது இனி என்றாவது நீ சந்திக்க மறந்தால் நான் என்னாவது?

வாழ்கின்ற வாழ்வு எல்லாம் நீர்குமிழ் போன்றது கண்மணியே !!!

இன்னிசை மட்டும் இல்லையென்றால் என்றோ என்றோ இறந்திருப்பேன்..

பூப்போன்ற என் நெஞ்சு யார் கண்டது... பொல்லாத மனம் என்று பெயர் வந்தது...

இரசனையென்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணைக்கண்டோம்.. நானும் அவளும் இணைகையில்.. அன்று நிலா பால்மழை பொழிந்தது..

உன் பூவிழி பார்வைகள் போதுமடி.. என் பூங்கா இலைகள் பூக்குமடி.. உன் காற்கொலுசு ஒலிகள் போதுமடி.. பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி...

என்னைக் கொஞ்சம் உறங்கவைத்தால் வணங்குவேன் தாயே....

நீ முடிந்த பூவில் ஒரு இதழாய் வாழ்ந்து விட்டு போவதற்கு நினைத்தேன்

நீ வரும்போது நான் மறைவேனா?

கம்பன் வரைந்த ஓவியம் நீ... அவன் தூக்கியெறிந்த தூரிகை நான்...

உந்தன் விழிகள் அழும்போது எந்த விரலும் துடைக்காது.. நேற்றை மறப்போம்... நாளை ஜெயிப்போம்... என்றும் ஜெயித்திருப்போம்...

ஒரு பக்கம் எரியுதடி... ஒரு பக்கம் குளிருதடி... சக்கரத்தில் என்னை வைத்து சுற்றிவிடும் காலம்...

விடியல் வேண்டுமா இரவுகளை எரித்துப்பார் !!!

உனக்கும் பொழுது போகணும்... எனக்கும் பிழைப்பைப் பார்க்கணும்... கொஞ்சம் அழுது தீர்க்கணும்... நெஞ்சைத் தொடுகிற ராகம் இது..

கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா? காளிதாசன் சகுந்தலை உந்தன் சேயல்லவா?

மோகனமே உன்னைப்போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளை கொண்டு போனதில்லை

காலம் மாறும்போது நீயும் மாறக்கூடாதா? எந்தன் கவிதைக் கனவே கரையாதோ உன் உள்ளம் ?

கரையாவதும் நுரையாவதும் அலையாவதும் உன் சொல்லில் உள்ளதடி...

எனது இரவுகள் உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி...

சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கு நான் சிரிக்காத நாள் இல்லையே

சொல்வது குறைவு செய்வது அதிகம்... செயல் புயல் நானடி.. வாஜி வாஜி சிவாஜி..

உயிர் விடும்போதும் உன் குரல் கேட்டால் மரணம் முக்தி பெறும்

எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்கள் இல்லை

பழையராகம் மறந்து பறந்ததென்ன பிரிந்து... இரவுதோறும் அழுது என்னிரண்டு கண்ணும் பழுது...

வார்த்தைகளால் காதலித்தேன்... ஜாடைகளால் சாகடித்தாய்... மழைதான் கேட்டேன் பெண்ணே... இடி மின்னல் தந்தாய் கண்ணே...

ஆசைக்காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே

நெஞ்சம் துடித்திடும் ராணி... நீயோ அடுத்தவன் தோழி... என்னை மறந்துபோவதும் நியாயமோ?

பெண்கள் கையில் சிக்கும் ஆண்கள் எல்லாம் பாவம் உண்மை கண்டேன் பெண்ணே உன்னால்...

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே... உன் முன்னே உன் முன்னே மெய்தாள நின்றேனே...

சட்டைமீது பட்டாம்பூச்சி முட்டும்போது வெறுத்தவன் விட்டுவிலகி போகும்போது விரல் நீட்டித் துடிப்பதோ?

மனிதன் காற்றை சுவாசிப்பதால் வாழ்வதில்லை... நம்பிக்கையை...

அழுகிறேன் தொழுகிறேன் எனைக்கண்டு நானே...

ஒருநாள் ஒருநாள் என்றே தினமும் போகும் மறுநாள் வருவாள் என்றே இரவில் இதயம் சாகும்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே!!!இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு

ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை இறப்பேன் உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்

உதவாதொரு தாமதம் உடனே விழி தமிழா!!!

உன்னோடு நான் கண்ட பந்தம் மண்னோடு மழை கொண்ட சொந்தம் காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்

சாதனைகள் படைத்த நெஞ்சமடி வேதனையால் நெஞ்சு கெஞ்சுதடி

கடைசித்தமிழன் பசியைப்போக்க சதையை அறுத்துத்தருகிறோம்

இரத்தத்தில் கலந்து சித்தத்தில் புதைந்த தமிழே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்

இரத்தத்தில் கசிந்து சித்தத்தில் புதைந்தவள் நீ...

என்மீது யாரும் கல்லெறிந்தால் சிரிக்கவும் பழகிக்கொண்டேன்

புதிதாகப் பிறந்திட நான் புத்தன் இல்லை வழிவிடு

தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்

என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம் முதல்வரி தந்த முகவரி நீ

உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறவாது கண்மணியே

போகும்வழியில் நீ வந்தால் போதையுண்ட பேதையாய் சாகும்வரை உன்வழியில் சரித்திரங்கள் எழுதுமவரை

ஆட்டுவித்தால் யாரொருவன் ஆடாதானே கண்ணா.. ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதானே கண்ணா..

ஆம்ஸ்ரோங்க கண்டா அலறும் அந்த நிலா நிலா நிலா!!! ஜொள்ளுவிட்டு நிக்க நான் சுள்ளான் அல்ல சுறா சுறா சுறா!!!

பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் பெண்மனது என்னவென்று புரியவில்லையே

நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா ? பழகத்தெரிந்த உயிரே உனக்கு விலகத்தெரியாதா ?

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம்

உயிர் வாழ்கிறேன் உனக்காகத்தான் யாரும் இல்லை எனக்காகத்தான்

கண்ணிரண்டில் நான்தான் காதலெனும் கோட்டை கட்டிவைத்துப் பார்த்தேன் அத்தனையும் ஓட்டை

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னைக்கேட்கும் எப்படிச்சொல்வேன் உதிர்ந்துபோன மலரின் மெளனமா ?

பாலும் கள்ளும் நிறத்தால் ஒன்று நானென்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா

சொல்லவந்தேன் சொல்லிமுடித்தேன் நீ வரும்திசை பார்த்து இருப்பேன் நாட்கள் போனாலும்...

என் கவிதைக்குப் பொருள் தந்த கலைவாணி நீயா ? என் காதோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா ?

காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா

நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சந்நிதி

ஒரே பாடல் உன்னை அழைக்கும் உந்தன் நெஞ்சம் என்னை நினைக்கும்

பூஞ்சோலை கிளியே பொன்மாலை நிலவே பூமாலை அழகே கண்கள் தீட்டிய கவிதையே

வியர்க்கின்ற போதும் நாம் வியக்கின்ற தேகம் விடிந்தாலும் கூட விடியாத தேசம்...

விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி அதன் ஆழங்கள் நீ அறிந்தால் போதும்

என் தேவியே... நானும் செய்த குற்றமென்ன கூறு... ஒரு பார்வை பாரு...

சத்தத்தினால் கொண்ட பித்தத்தினால் காதல் யுத்தத்தினால் எனது ரத்தத்தினால் கவிதை எழுதிவைத்தேன் தோழி இருகண்ணிருந்தால் வாசித்து போடி

நன்றி

Sunday, October 26, 2008

அஜுத் அர்ஜுன் மறுப்பு

கடந்த ஆக்கத்தில் எழுதியவற்றை மறுத்திருக்கிறார்கள் இந்த நடிகர்கள். ஓர்சில இணையத்தளங்களே இந்த செய்தியை வெளியிட்டு இருக்கின்றன. இது வெளிநாட்டு தமிழர்களின் எதிர்ப்பால் விடப்பட்ட அறிவிப்பா இல்லை தமாக வெளியிட்ட அறிவிப்பா என்று தெரியவில்லை.. செய்திகளை வழங்கவேண்டியது என் கடன்.. இதோ அவர்களின் பதில்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=45990

Saturday, October 25, 2008

அறிவற்ற அஜித் அர்ஜுன்

அறிவற்ற அஜித் அர்ஜுன் தெரிவித்த கருத்துக்களை உணர்வுள்ள எந்த ஒரு தமிழனும் எதிக்கவேண்டும். தமிழரால் வாழ்ந்து, பணம் சேர்த்த நடிகர்கள் தமிழின அழிவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இப்படியொரு கருத்தைத் தெரிவித்திருப்பது எமை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. உயிருக்காக அழுகின்ற தமிழர்களுக்காக உண்ணாவிரதம்கூட இருக்கமுடியாத இவர்களின் தமிழர்கள் அல்டிமேட் ஸ்டார், அக்ஷன் கிங். வெளிநாட்டில் வாழுகின்ற ஈழத்தமிழர்களின் ஆதரவில்லாவிட்டால் உங்கள் பணம் எங்கிருந்து வரும் தல. தமிழர்களே, உங்கள் உடலிலும் ஒரு சொட்டு தமிழ் இரத்தமாயும் ஓடுமாயின் இவர்கள் படங்களை புறக்கணியுங்கள்.

தமிழ் உணர்வாளர்கள் அமீர், சீமானைக் கைது செய்கிறது தமிழகக் காவல்துறை தமிழர்களை எதிர்ப்பவர்களை கட்டியணைக்கிறது... என்ன கொடுமையிது.

கீழே காணப்படுகின்ற தமிழ்வின் ஆக்கத்திற்கு எம் நன்றி.

I was so disappointed to hear this news, actors Ajith and Arjun don't even understand why the hell they have to support those poor Sri Lankan Tamils, who are being bombed, killed, tortured by the Sri Lankan government. These two idiots don't even understand whats goin on in Sri Lanka and we are still supporting those idiots by buying their movies for millions of dollars, making them ultimate star and action king of Tamil Cinema.. Bloody Hell, even if they are freakin stewwwpid enough not to know how they are making their money (in millions), can't they just be kind enough to support their fans/civilians being killed by the army.

I have attached an article below, if you don't understand it, please get someone to translate it for ya.

DO NOT GO AND WATCH THEIR MOVIES, AND DON'T FORGET TO TELL IYNGARAN NOT TO BUY THEIR MOVIES ANYMORE.

ஈழத் தமிழருக்காக நாங்கள் ஏன் உண்ணா விரதம் இருக்கவேண்டும்? அஜித் அர்ஜுன்: புலம்பெயர் தமிழ் ரசிகர்கள் கொதிப்பு [ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2008, 12:29.02 PM GMT +05:30 ] இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாம் திகதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளளது.
இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு ரஜினி, கமல் உட்பட அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் சங்கம் கடிதங்கள் அனுப்பி வருகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள்.

உண்ணாவிரதத்தையொட்டி முதலாம் திகதி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் பங்கேற்கமாட்டார்கள் என நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர், நடிகைகள் முதலாம் திகதி திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர்களான அஜித்தும், அர்ஜுனும் இலங்கையில் இருக்கிற தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களின் இந்தக் கருத்து இலங்கைத் தமிழர்களை பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவர்களின் கருத்து வெளிவந்த சில மணி நேரங்களில் இவர்களது படங்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, இவர்கள் இருவரினது கருத்தால் இவர்களை வைத்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களே இவர்களின் படங்களை பெரும் விலை கொடுத்து வாங்கி திரையிடுகின்றார்கள். ஈழத்தமிழர்களின் உழைப்பைச் சுரண்டி இவர்களுக்கு கொடுக்கின்றார்கள். இப்படியானவர்களின் படங்களை எடுத்து வெளியிடுபவர்கள் இனிமேல் சிந்திக்கவேண்டும் என மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி யார் யார் கலந்துகொள்கின்றார்கள். யார் கலந்துகொள்ளவில்லை என்பதை தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை அடுத்து புலம்பெயர் தமிழ் மக்களிடையே பல விதமான கருத்துக்கள் பேசப்பட்டு வருவதனைக் கருத்திற்கொண்டு இந்தியாவில் 22 ஓக்டோபர் 2008 அன்று வெளிவந்த செய்தி இதழில் இருந்து ஒரு சிறிய பகுதியை இந்த செய்தியுடன் இணைத்துள்ளோம்.


Friday, October 24, 2008

தீபாவளி திரைப்படங்கள்

இந்த ஆண்டு தீபாவளிக்கு வரவிருந்த திரைப்படங்கள் எல்லாம் பின்தங்கிக் கொள்ள 'ஏகன்' மற்றும் 'சேவல்' ஆகிய திரைப்படங்களே வெளிவரவிருக்கின்றன. நான் அதிகமாக எதிர்பார்த்த 'வாரணம் ஆயிரம்' வெளிவராதது கவலையாக இருந்தாலும் 14 நவம்பர் மாதம் வெளியிடப்படுவது சந்தோஷமே.

நடிகர் அஜித் நடித்து வெளிவருவதால் "ஏகன்" திரைப்படத்தை பலரும், குறிப்பாக 'தல' ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனாலும் நடன இயக்குனர் ராஜுசுந்தரம் முதன்முறையாக இயக்குகின்ற படம் என்பதால் பெரிதாக அவருடைய திறமையை மதிப்பிடமுடியாது. 100 திரைப்படங்களுக்கு மேல் நடனம் அமைத்தபோது இயக்குனர்களுடன் பணிபுரிந்த அனுபவம் நிச்சயமாக இருக்கும். இந்தப்படத்தின் பாடல்கள் யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி இருந்தாலும் வழமையான யுவனின் பாடல்கள்போல் பிரபல்யமாகுமா என்பது கேள்விக்குறியே. 'ஓடும்வரையில்' 'hey baby' 'hey saala' போன்ற பாடல்கள் நன்றாக இருக்கின்றன. ஆனாலும் இன்னோர் நாக்கமுக்க பாடலை எதிர்பார்க்க முடியாது.

நடிகர் பரத்தின் 'சேவல்' திரைப்படம் தீபாவளிக்கு வருகின்ற கதையம்சம் பொருந்திய திரைப்படம். குறிப்பாக தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் ஹரியின் இயக்கத்தில் இந்தப்படம் சாதனை படைக்கும் என்றே கருதுகிறார்கள். ஜி வி பிரகாஷின் இசையும் திரைப்படத்திற்கு ஏற்ப கிராமப்புற வாசனையுடன் அருமையாக இருக்கின்றன. சிம்ரன் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையிலே இராமன் தேடிய சீதை படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அருமையான, யதார்த்தமான திரைப்படம். கதாநாயகர்களை போற்றும் பாடல்கள் இல்லை, பறந்து பறந்து அடிக்கும் நடிகர்கள் இல்லை. "புதியகீதை" திரைப்படத்தில் அறிமுகமாகிய ஜெகன்ஜி இயக்கிய படம் என்றால் நம்பவேமுடியவில்லை. இதைப்போலவே அண்மையில் வந்த படங்களில் அருமையான படம் என்று குறிப்பிடக்கூடிய படம் 'ஜெயம் கொண்டான்'. வினய்யின் அருமையான நடிப்பு, லேகாவின் வில்லத்தனமான வேடம் போன்றவை பாராட்டிற்கு உரியவை. இரண்டு திரைப்படங்களையும் தன் இசையால் தாலாட்டியிருப்பவர் வித்யாசாகர்.

இவ்வளவு தூரம் தமிழ்த் திரைப்படங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோமே, அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்தார்கள் என்று கொதித்திருந்த எமக்கு இராமேஸ்வரம் சென்று தங்களையும் தமிழர்கள் என்று அடையாளம் காட்டியிருக்கும் இயக்குனர்கள். அவர்களுக்கு நன்றிகள்.

கடந்த MP3 websites பற்றிய ஆக்கத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றிகள். நிச்சயமாக உங்களுக்கு பயன்பட்டிருக்கும் என்று நம்புவோம்.

Wednesday, October 22, 2008

என் இணைய உலகம்

கடந்த ஓர் சில ஆக்கங்கள் சற்றே உணர்ச்சி பூர்வமாக இருந்துவிட்டன. என்ன செய்வது, எல்லாம் காலத்தின் கோலம். இந்த ஆக்கத்தில் நான் இணையத்திலே அதிகமாக பார்வையிடும் இணையத்தளங்கள் பற்றிய ஒரு அலசல்.

இசையோடு உயிர்வாழும் காரணத்தினாலும் இன்பத்தமிலொலியில் நிகழ்ச்சிகள் செய்வதாலும் புதிய பாடல்களைத் தேடி அலைய வேண்டி இருக்கிறது. உங்களுக்கும ஏதாவது நல்ல இணையப் பக்கங்கள் இருந்தால் தயவுசெய்து அறியத்தாருங்கள். இங்கு, கன்பாராவில் தமி்ழ் கடை ஒன்றுதான் இருப்பதால் இசைத்தட்டுகள் வாங்கமுடியாத நிலையும் நிலவுகிறது. சரி... விசயத்துக்கு வருவோம்.

தமிழ் பாடல்களை இந்தியாவில் வெளியாகியதுமே தரையிறக்கம் செய்ய torrents தான் சரியான வழி. அங்கே வெளியிட்டுக்கொண்டு இருக்கும்போதே இங்கே சுடச்சுட தரையிறக்கம் செய்துகொள்ளலாம். குறிப்பாக www.tamilthunder.com மற்றும் www.tamiltorrents.net இணையத்தளங்கள் நான் அதிகம் பாவிப்பவை. முதலாவக தமிழ்தண்டரில் வேகமாக தரையிறக்கம் செய்யப்படுவதாக உணர்கின்றேன்.

Tamilmp3world, Tamilbeat, Geethams போன்ற இணையத்தளங்களும் நன்றாக செயற்படுகின்றன. இவற்றைத் தவிர நான் பயன்படுத்துகின்ற ஓர் சில இணையத்தளங்களை வலது புறத்தில் பட்டியலிட்டுள்ளேன். உங்களுக்கும் அவை பயனுள்ளவையாக இருக்கும்.

என்னுடைய படிப்புநேரத்தை குழப்புகின்ற ஒரேவிடயம் தமிழ் சினிமா செய்திகளை வாசிக்கின்ற கெட்டபழக்கம். நான் அடிக்கடி விஜயம் செய்கின்ற இணையத்தளங்களையும் தொகுத்துள்ளேன். சும்மா க்ளிக் பண்ணிப்பாருங்கள்.

அறுத்தது போதும், உங்களுக்கும் ஏதாவது நல்ல இணையத்தளங்கள் தெரிந்தால் அறியத்தாருங்கள்...

Tuesday, October 14, 2008

கனபரா அமைதிப் போராட்டம்.

இன்று அவுஸ்ரேலியத் தலைநகர் கன்பராவில் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சரின் வருகையையும் அவருடைய தமிழர்களுக்கு எதிரான பரப்புரையும் கண்டித்து அவுஸ்ரேலிய தமிழர்களால் அமைதி கண்டனப்போராட்டம் நடைபெற்றது. சி்ட்னி நகரிலிருந்து 6 பேரூந்துகளிலும் மெல்பண் நகரிலிருந்து 2 பேரூந்துகளிலும் தமிழர்கள் ஒருங்கினணந்து வந்து இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட காட்சி அனைவரையும் புல்லரிக்கச் செய்தது. கன்பராவிலிருந்தும் தமிழ் நெஞ்சங்கள் வேலையில் மதிய இடைவேளையில் கலந்து எம் ஒற்றுமையை நிலைநாட்டினார்கள். Don't kill tamils, Go Away Rohitha, Tamils want press freedom போன்ற உணர்வுகளை பொங்கியெழச் செய்யும் வாக்கியங்களை மக்கள் விண்ணளாவக் கோசமிட்டார்கள். வேலை, படிப்பு என்று நொண்டிச்சாட்டுச் சொன்ன நாட்டுப்பற்றாளர்கள் நாக்கைப் புடுங்கிக் கொண்டு சாகலாம்.

ஓர் சில நிழல்படங்களை கீழே காணலாம். குறிப்பு: நான் தொலைத்த 40 நாற்பது டொலரை யாராவது கண்டால் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்.





Saturday, October 11, 2008

கன்பராவில் ரோகித போகல்லாகம

வருகின்ற செவ்வாய்க்கிழமை சிறிலங்கா வெளியுறவுத்துறை
அமைச்சர் ரோகித போகல்லாகமவின் வருகையை எதிர்த்து
அவுஸ்ரேலிய வாழ் இளைஞர்கள் மாபெரும் கண்டன நிகழ்வை
நடாத்தவிருக்கிறார்கள். பயங்கரவாதிகளை அழிக்கின்றோம் என்று உலகிற்கு பரப்புரை செய்துவிட்டு சாதாரண பொதுமக்களை கொன்று குவித்துவரும் இலங்கை அரசையும் இவ்வாறான பொருளற்ற அமைச்சர்களையும் எதிர்த்து குரல் எழுப்ப அனைவரும் இணையவேண்டும்.

தாயகத்தில் என்ன நடந்தாலும் எனக்குக் கவலையில்லை என்று பகட்டுப்பேசி பார்ட்டிக்குப் போகின்ற கூட்டமாக இல்லாமல் சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு துடித்தெழுவோம். கனடா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களைப்போல நாமும் எங்களுடைய ஒற்றுமையை பறைசாற்ற வேண்டியவேளை இந்தவேளை. படிப்பு, வேலை போன்ற காரணப் படைப்புக்களையும் கண்துடைப்புக்களையும் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய்விட்டது. குறுகிய கால அழைப்பாக இருந்தாலும் வருக! தமிழர்களாய் தமிழர்க்காய் இணைக.


On Tuesday the 14th of October, the Sri Lankan Minister for Foreign Affairs, Mr. Rohitha Bogollagama will be conducting a press conference in Canberra. He has been a member of the Sri Lankan Parliament from 2000 and also represented the SriLankan Government at the two rounds of peace talks held in Geneva with the LTTE in 2006. We will be traveling to Canberra on Tuesday to protest his presence in Australia, and in the hope that we can draw media attention to our cause. Buses have been organised and will be leaving from both Homebush and Pendle Hill at 7am on the 14th. It is expected that we will be back in Sydney at approximately5pm.

As Australian Tamils, it is our responsibility to do everything in our power to stand up for our brothers and sisters and ensure that their silenced cries are heard by the world. We cannot stress enough, how important it is that everyone attends the protest on Tuesday! We have to show our solidarity and strength. Ten voices are better than one and one hundred voices better than ten. We understand that many of you will have study and work commitments but we ask that you take the time and make an effort for the sake of our people.

Even if you cannot make it, most of you have parents or grandparents who can take the time off; younger siblings eager to take a day off school; other family and friends keen to participate in this event. Please take a few minutes and help us spread the word. We realise that it is very last minute but we hope that you will understand the seriousness of the situation and join us in Canberra. Please let us know how many seats you will need and where you wish to board the bus by replying to this message ASAP.

I strongly believe that 'having classes or work' is not a valid excuse and have to work as hard as how we worked for the dinner. Regardless of where you came from and what your background is, it is time for us to unite as Tamils to protect the ones back home. As you all know, Tamils in Canada, London and India have shown their support to the Tamils suffering in Sri Lanka... and it is time for us to show that WE CARE ABT THEM.

Buses are organised for free of charge ( voluntarily payments are welcomed) and takes you a working day (8 hours) to prove our unity. I will be catching the bus with you guys, therefore, you will not feel isolated. PLEASE BE THERE!

Thursday, July 17, 2008

UTS தமிழ்ச்சங்கமும் நான் இயக்கிய நாடகமும்...

[ UTS தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு மலருக்காக எழுதப்பட்ட ஆக்கம் தெரிந்தோ தெரியாமலோ வெளியிடப்படவில்லை. அதனை கீழே பிரசுரம் செய்கிறேன்... ]

வருடங்கள் உருண்டோடும் வேளையிலே, மீண்டும் UTS தமிழ்ச்சங்கத்தின் கதம்பமாலை 2007 நிகழ்வில் ஓர் அங்கமாக இருந்ததில் மகிழ்வடைகின்றேன். மெல்லத்தமிழ் இனிச்சாகும் வேளையிலே, இள இரத்தங்கள் தமிழுடன் இணைந்திருப்பது, தமிழால் இணைந்திருப்பது ஆனந்தத்தைத் தருகிறது. கடந்த ஆண்டுகளில், இன்பங்களையும் துன்பங்களையும் களைந்தெடுத்து இளைஞர்களாய் ஒன்றிணைந்து பற்பல கலைநிகழ்வுகளை வழங்கியிருந்தோம். கடந்து வந்த பாதையிலே கண்ணீரின் சுவடுகளை சிற்பமாக செதுக்கியிருக்கிறோம், தடைக்கற்களை படிக்கற்களாக்கியிருக்கிறோம். இந்த வருடமும் இனியதோர் நிகழ்வாக கதம்பமாலை உங்களை மகிழவைக்க இருக்கிறது.

இந்த வருடம், வழமைக்கு மாறாக நாடகத்தமிழ் மூலம் உங்களுக்கு விருந்தளிக்க இருக்கிறேன். முதன்முறையாக நெறிப்படுத்துகின்ற நாடகம் என்பதானால் பிழைகளைப் பொறுத்தருளி ஆதரவளிப்பீர்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. நாம் கருவாக எடுத்திருக்கும் விடயம் கரிகாலன், நீதிக்கும் வீரத்திற்கும் பெயர்போன கரிகாலனை எவ்வாறு எம் சந்ததிக்கு எடுத்து வருவது என்று சிந்தித்தபோது கிடைத்த ஆயுதம்தான் 21ம் நூற்றாண்டு. ராஜதமிழில் இருந்த உரையாடல்களை இலகுதமிழில் அவுஸ்ரேலிய உதாரணங்களுடன் உருவாக்கியிருக்கிறேன். கதாபாத்திரங்களில் களை சற்றும் குறையாமல், நாடகத்தமிழில் என் அறிவுக்கு எட்டியவரை விளையாடியிருக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும். நடிகர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை, இரவும் பகலும் இடைவிடாது முயன்று உரையாடல்களை பயின்று இன்று அரங்கேறுகிறார்கள். மூலக்கதையிலிருந்து சில சம்பவங்கள் இந்த அரங்கிற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் கதையின் தனித்துவம் சிதைக்கப்படவில்லை.

வெண்ணிப்பரந்தலையில் இடம்பெற்ற போரில் கரிகாலசோழன் சேரனையும் பாண்டியனையும் தோற்கடித்து வெற்றி மயக்கத்திலே அரண்மனைக்குச் செல்கின்றான். அப்போது, அங்கே வருகின்ற 'பொன்னி' என்கின்ற புலவி, கரிகாலன் போர்தர்மங்களை மீறினான் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறாள். உண்மையை அறிய விரும்புகின்ற கரிகாலன் மாறுவேடத்தில் வந்து பொன்னியிடம் நடந்த விடயங்களை அறிந்து கொள்கின்றான். சேரனின் மார்பிலே பாய்ச்சிய வாள் முதுகைத் துளைத்து வெளியேறுவதை சுட்டிக்காட்டிய பொன்னி போரினால் ஏற்படுக்கின்ற சேதங்களையும் அழிவுகளையும் எடுத்துரைக்கின்றாள். தன் தவறினை உணந்துகொள்ளும் கரிகாலன் பொன்னியை தன் அவைப்புலவராக பணியாற்றுமாறு கேட்கின்றான். அவனுடைய வேண்டுகோளை மறுக்கும் பொன்னி, தன் காதலின் நினைவுகளை அசைபோடவும் தமிழுக்கு தொண்டாற்றவும் விடைபெற்றுக்கொள்கிறாள்.

சற்றே மாறுபட்ட கருவினைக் கொண்டு இந்த நாடகத்தினை உருவாக்க பல காரணங்கள் உண்டு. எங்கள் தமிழ்ச்சங்கம் பற்பல புதுமுயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறது. உதாரணமாக குழந்தைகள் நடனத்தை பல்கலைக்கழக நிகழ்வொன்றில் மாபெரும் அளவில் அரங்கேற்றி வரலாறு படைத்தது. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதம்பமாலையினை தமிழும் இளைஞர்களும் சங்கமிக்கும் களமாக மாற்றிய பெருமையும் உடையது UTS தமிழ்ச்சங்கம். தமிழை வளர்க்கிறோம் என்று கூறிவிட்டு, கூடியிருந்து ஆங்கில்த்தில் உரையாடுபவர்கள் மத்தியிலே, அங்கத்தவர்கள் கூட்டங்களை தமிழிலே நடத்துகின்ற ஓரேயொரு பல்கலைக்கழக தமிழ்ச்சங்கமும் UTS தமிழ்ச்சங்கமே. இந்த வருடமும் புத்தம்புது முயற்சியாக, டில்லா என்கிற புதுமைத் தாளலயத்தை அரங்கேற்றும் வேளையிலே எடுக்கப்பட்ட மாறுபட்ட முயற்சிதான் '21ம் நூற்றாண்டில் கரிகாலன்'. நகைச்சுவையை நாடி நிற்கின்ற உலகில் 'அமைதி வேண்டும்' என்ற கருத்தை முன்வைத்திருக்கின்றோம். முள்ளின்மீது நடைபோடும் பயணத்தில் ரோஜாவைப் பறிப்பதற்கு முயன்றிருக்கிறோம். முள் குத்தும் வலியையும் தாங்கியிருக்கிறோம் ரோஜா கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.

மீண்டும் சந்திக்கும்வரை,

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு

Wednesday, July 16, 2008

புதிய வானம் புதிய பூமி

வணக்கம்...

நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் வலைப்பதிவு ஒன்றில் சந்திக்கின்றேன். கவிஞர் கண்ணதாசன் சொன்னதுபோல 'நாம் பணத்தை மட்டும் சேர்ப்பதில்லை, அனுபவங்களையும் சேர்க்கிறோம். அவற்றைப் பதிந்துகொள்ள நான் கிறுக்குபவற்றை எழுதிக்கொள்ள ஓர் களமாக இந்த வண்டிசை பாடும் எழில் வசந்தப்பூங்காவில் பயன்பட இருக்கின்றது. ஆரம்பதிற்கு ஓர் சில குறுங்கவிதைகள்:

இதமான உறவுகள் புரியவில்லை இதயம் மரத்துவிட்டதோ - இல்லை
இன்னும் துடித்துக்கொண்டுதான் இருக்கிறது

வாழ்வின் வழிகளைத் தேடித்தேடி
விழிகள் தொலைந்து போனதடி
உலகிலே அமைதியைத் தேடித்தேடி
உள்ளம் தொலைந்து போனதடி
தமிழ்பேசும் குழந்தையைத் தேடித்தேடி
தாயகவுணர்வு தொலைந்து போனதடி

என் வாழ்வின் வில்லனும் நானே...
வில்லனை வெல்லும் நாயகனும் நானே...

-S-